ஆதிசிவன்

 தஞ்சை பெரிய கோவில்: 

                 இந்தியாவில் இருக்கும் சிவன் கோயில்களில்   பாதிக்கு மேற்பட்ட    கோயில்கள்     தமிழ்நாட்டில்தான்           உள்ளனஅதாவது தமிழ்நாட்டில் மட்டும்        2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன.    இவற்றில்  பெரும்பாலான வரலாற்றுச் சிறப்பு மிக்க   கோயில்கள்   சோழர்கள்  காலத்தில் கட்டப்பட்டவையாகும். அதேபோல மற்ற   பேரரசுகளின் காலத்திலும்    கணிசமான    அளவு   சிவன்         கோயில்கள் தமிழ்நாட்டில்     எழுப்பப்பட்டுள்ளன.       இப்படியாக கட்டப்பட்ட சிவன் கோயில்களில் சில   சிவன்   கோயில்கள் வரலாற்று       மற்றும்     ஆன்மிக       முக்கியத்துவம்   வாய்ந்தவை.அதாவது சைவ சமயத்தில்    கூறப்படும்   28 ஆகமங்களின்    அடிப்படையில்    முக்கியமான  28 சிவன் கோயில்கள் கட்டப்பட்டு உள்ளது.    அதில்    மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோவில் ஒன்றான தஞ்சை பெரிய கோவில் பற்றி இப்பகுதியில் காண்போம் .
 
       சோழர் கால கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு மாபெரும்  பொக்கிஷம் தான் தஞ்சை பெரிய கோவில். இக்கோயிலைக் கட்ட வெளி மாவட்ட, வெளி மாநிலங்களிலிருந்துதான் கற்கள் அனைத்துமே கொண்டுவரப்பட்டு இருக்கிறது.  கருவறையில்  உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும்.  6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும்  கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித் தனியாக  கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.  

    கோபுரம் மட்டுமே தரைத் தளத்திலிருந்து  216 அடி உயரமுடையது.  அதன் உச்சியில் உள்ள வட்ட வடிவ பிரம்ம மந்திரக்கல் 80 டன்  எடையுள்ள ஒரே கல்.  இங்கிருந்து 7 கி.மீ. தூரத்திற்கு கும்பகோணம் அருகிலுள்ள சாரப்பள்ளம்  என்ற ஊர் வரை மணல் கொட்டி அந்த ஒரே ஒரு கல்லை மட்டும் மேலே கொண்டு சென்றனராம்.   உலகின் பல நாடுகளின் கட்டிடக் கலை வல்லுனர்கள் வந்து பார்த்து வியந்து போன கோயில் இது.   இங்கு உள்ள நந்தி 20 டன் எடையுள்ள ஒரே கல்லால் ஆனது.  இது 2 மீட்டர் உயரமும், 2 மீட்டர்  நீளமும் 2.5 மீட்டர் அகலமும் உடையது.  நவக்கிரகங்கள் 9 லிங்க வடிவம் உடையது.  அனுபவித்த  இரசிக்கத்தக்க கலைக் கோவில்.
     ராஜ ராஜ சோழன் இக்கோவில் முழுவதையும் கற்களால் கொண்டு கட்டியுள்ளான்.  ஏறக்குறைய  130000 டன் கற்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.  இக்கோவிலை ராஜராஜ சோழனின்  ஆணைப்படி கட்டி கொடுத்த சிற்பி குஞ்சாரமல்லன் ராஜராஜ பெருஞ்சத்தன்.  இக்கோவிலின் கட்டிட  அமைப்பு வாஸ்து சாஸ்திர முறைப்படி அமைக்கப் பெற்றிருக்கிறது.  இக்கோவில் சிவன் மற்றும்  நந்தி தவிர பல சிறிய சந்நிதிகளை கொண்டுள்ளது.

சிவனை தவிர விஷ்ணு மற்றும் துர்கா சிலைகள் உள்ளது. இதன் தெற்கு சுவரில் விநாயகர்,  விஷ்ணு, பூமாதேவி, ஸ்ரீதேவி, இரண்டு துவார பாலகர்கள், வீரபத்ரன், தக்ஷினாமூர்த்தி மற்றும்  நடராஜர் ஆகியோர் உள்ளனர்.  இதன் மேற்கு சுவரில் ஹரிஹரன், அர்த்தநாரீஸ்வரர், இரண்டு  துவாரபாலகர்கள் மற்றும் இரண்டு சந்திரசேகரர்கள் உள்ளனர்.  இக்கோவிலின் வடக்கு சுவரில்  சிவன் சூலத்துடனும், சரஸ்வதி, மகிஷாசுரமர்த்தினி மற்றும் பைரவர் ஆகியோர் உள்ளனர்.
x


2 comments:

யாளிகள்

உலகின் மிகப்பெரிய விலங்கு:    நாம் அனைவரும் டைனோசர் என்ற விலங்கை ஆங்கில படங்களில் கண்டு அதுவே உலகில் பெரிய விலங்கு என் நினைத்து கொண...