சிதம்பர நடராஜன்

                            


        மிழனே ! இந்த பகுதி ஒவ்வொரு தமிழனுக்கும் படிக்க வேண்டிய ஒரு பகுதி ,உலகமே பார்த்து வியக்கும் பல சரித்திர கோவில்கள்  நாம்  வாழும் தமிழகத்திலும் உள்ளது . இதன் தொன்மையும் நுட்பத்தையும் நாம் அறிவதில்லை. அதி ஒரு சரித்திர கோவில் ஆன தில்லை நடராஜன்  கோவில் பற்றி இப்பகுதியில் காண்போம்  
   சிதம்பரத்துக்குப் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர். புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பூசை பண்ணியதால் அதற்குப் புலியூர் என்று பெயர். அந்தக் கோயிலுக்குச் சிதம்பரம் என்று பெயர். சித் - ஞானம்”, “அம்பரம் - ஆகாசம்”. சித் + அம்பரம் - சிதம்பரம். காலப்போக்கில் அந்த ஊர் பெயர் மறைந்து கோயில் பெயரே ஊரின் பெயராக மாறிவிட்டது.
    நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு கோபுரமாக நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது இந்த ஆலயம். இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில் நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களை காணமுடியும். மேலும் இங்கு மூலவர் சிலை இருக்கும், இடம் கனக சபை என்று அழைக்கப்படுகிறது. இந்த சபை, பராந்தக சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டது. அதனால் இந்தச் சபை பொன்னம்பலம் என அழைக்கப்படுகிறது; வடமொழியில் கனக சபை எனக் கூறப்படுகிறது.
     "ஆடல் கடவுள்" என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார். வலது புற மேல் கையில் உடுக்கையை கொண்டிருப்பது இந்த உலகம் ஒலியின் மூலம் துவங்கியது என்பதைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. இன்றைய அறிவியல் அறிஞர்கள் இதை தான் பெரு வெடிப்புக் கொள்கை (BIG BANG THEORY) என்று அழைக்கின்றனர். இடது புற மேல் கையில் உள்ள நெருப்பு எந்நேரமும் அழித்து விடுவேன் என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது. வலது புற கீழ் கையில் காப்பாற்றுவதை குறிப்பதை போன்று, பயப்படாதே நான் இருக்கிறேன் என்று கூறுகின்றது.  இடது புற கீழ் கையால், உயர்த்தி இருக்கும் காலைக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுவோருக்கும், தன்னை வணக்கும் பக்தர்களுக்கான இடம் என்பதை உணர்த்துகிறது. இந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துப்போகின்றது. உலகின் பெரிய அணு ஆராய்ச்சி அமைப்பான Geneva வில் உள்ள CERN (European Organization for Nuclear Research,the biggest particle physics laboratory in the world) என்ற இடத்தில், இந்த நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.


1. சிதம்பரம்  கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையப் பகுதியாக அமைந்துள்ளது. 
2. நடராஜப் பெருமான் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்தத் தாண்டவம் என்ற திருக்கோலம் காஸ்மிக் நடனம்  (COSMIC DANCE) என்று பல ஆய்வுகளால் கருதப்படுகிறது.
3.  நிலம், நீர், தீ, வளி, வான் ஆகிய பஞ்ச பூதங்களான ஐந்து இயற்கை அம்சங்களில், வானைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றைக் குறிக்கும் காளஹஸ்தி ஆலயம், புவியைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயம் ஆகிய மூன்றும்  சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது 79 பாகை, 41 கலை கிழக்கில் தீர்க்கரேகையில் அமைந்துள்ளன. இன்றைய அறிவியல் கருவிகள் உதவியுடன் நாம் பார்ப்பதை, அக்காலத்தில் அமைக்கப்பட்டிருப்பது அதிசயமாகும். இது இந்து மதத்தின்  பொறியியல், புவியியல் மற்றும் வானவியலின் 'உச்சகட்ட அதிசயம்' என்றால் அது மிகையாகாது.

4. திருக்கோயிலின் முக்கிய அங்கமான விமானத்தின் மேலிருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடுகளைக் கொண்டு வேயப்பட்டுள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 தடவைகள் சுவாசிப்பதைக் குறிக்கின்றது (15*60*24 = 21,600).
5. மேற்படி  21,600 பொற்தகடுகளை வேய, 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 72,000 என்ற இந்த எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளைக்  குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியைக் கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
6. 'பொன்னம்பலம்' சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தைக் குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகள் ஏற வேண்டும், இந்தப் படிகள் 'பஞ்சாட்சர படி' என்று அழைக்கப்படுகின்றது, அதாவது 'சி,வா,,,' என்ற ஐந்து எழுத்தே அது. இறைவன் இதயக் கமலத்தில் இடம் பெற ஐந்தெழுத்து மந்திரமே ஒரே வழி என்பதனை உணர்த்துவதாக இது உள்ளது.

7. இந்த கனக சபையைத் தாங்கிடும் நான்கு  தூண்களும் ரிக், யஜூர், சாம,  அதர்வணமாகிய  நான்கு  வேதங்களைக் குறிக்கின்றது.  நடராஜரின்  கனகசபை' பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேராக இல்லாமல், ஒரு பக்கமாகத் தள்ளி இருக்கிறது.
8. பொன்னம்பலத்தில் இருக்கின்ற இருபத்தெட்டு தூண்கள் இருபத்தெட்டு ஆகமங்களையும், சிவனை வழிபடும் இருபத்தெட்டு வழிமுறைகளையும் குறிக்கின்றன. இந்த இருபத்தெட்டு தூண்களும் அறுபத்து நான்கு குறுக்குச் சட்டங்களைக் கொண்டுள்ளது இது அறுபத்து நான்குக் கலைகளைக் குறிக்கின்றது. அதைச் சார்ந்து, இதன் குறுக்கில் செல்லும் பல வித சட்டங்களும், மனித உடலில் ஓடும் பல ரத்த குழாய்களைக்  குறிக்கின்றன.
9. பொற்கூரையின் மேலிருக்கும் ஒன்பது கலசங்கள்,   நவ சக்திகளைக் குறிக்கின்றன. அர்த்த மண்டபத்திலுள்ள ஆறு தூண்கள், ஆறு  சாஸ்திரங்களையும், அந்த மண்டபத்தின் அருகிலுள்ள மண்டபத்திலிருக்கும் பதினெட்டு தூண்கள், பதினெட்டு புராணங்களையும் குறிக்கின்றது.
10. மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது  சிதம்பரம் கோயில்.அதனால்தான் அதன் ஒன்பது நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கக் கூடிய ஒன்பது  நவ துவார வாயில்களைக் குறிக்கின்றது.

  தற்போதைய உலக   அறிவியல் அறிஞர்கள்  தற்போது இருக்கும் அறிவியல் வளர்ச்சியை வைத்து கண்டறிந்த உண்மைகளை தமிழன்   பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து அதற்காக ஒரு கோவிலையும் கட்டியுள்ளர்கள்.நாம் முன்னோர்கள் இத்தகைய திறமையானவர்கள் என பெருமிதம்கொள்வோம்...


No comments:

Post a Comment

யாளிகள்

உலகின் மிகப்பெரிய விலங்கு:    நாம் அனைவரும் டைனோசர் என்ற விலங்கை ஆங்கில படங்களில் கண்டு அதுவே உலகில் பெரிய விலங்கு என் நினைத்து கொண...