கண்டவராயன்பட்டி:
கிராமம் (Village)
|
:கண்டவராயன்பட்டி (Kandavarayanpatti)
|
தொகுதி(Block)
|
:திருப்பத்தூர் (Tiruppathur)
|
மாவட்டம் (District)
|
:சிவகங்கை (Sivaganga)
|
மாநிலம்(State)
|
:தமிழ்நாடு (Tamil Nadu)
|
நாடு (Country)
|
:இந்தியா (India)
|
கண்டம் (Continent)
|
:ஆசியா (Asia)
|
நேரம் மண்டலம் (Time Zone)
|
:IST ( UTC + 05:30)
|
செலவழிக்கும் பணம் (Currency
|
:இந்திய ரூபாய் (ரூபாய்)/(Indian Rupee ( INR ))
|
அழைப்பு குறியீடு (Dialing Code)
|
:+91
|
தேதி வடிவமைப்பு (Date format)
|
:தேதி /மாதம் /வருடம் (dd/mm/yyyy)
|
ஓட்டுனர் பக்கம்(Driving side)
|
:இடப்பக்கம்(left)
|
இணைய வசதி(Internet cTLD)
|
:உள்ளது IN
|
மொழி (Language)
|
:தமிழ் (Tamil)
|
கால அளவின் வேறுபாடு (Time difference)
|
:16 நிமிடம் (16 minutes)
|
அட்சரேகை (Latitude)
|
:10.203941
|
தீர்க்கரேகை (Longitude)
|
:78.3831597
|
கண்டவராயன்பட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் உள்ள இயற்கை வளம் மிகுந்த கிராமம். சாதி, மத வேறுபாடு
காணமல் அனைவரையும் சகோதரர்களாக உறவினர்களாக மனதில் நினைக்கும் ஒரு ஊர் என்றால் அது
மிகையாகாது. விவசாயம் ஊர் மக்களின்
பிரதான தொழில்கள். ஒரு சாரார் விவசாயத்தில் மட்டுமே ஈடுபட்டு இருப்பார்கள். எங்கள்
ஊரில் ஒரு சிறந்த செயலாக அனைவரின் வீட்டுக்கும் ஒரு மரம் வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து வீடுகளிலும்
மரங்கள் உள்ளது . முடிந்தவரை “சீமை கருவேலமரம்” எங்கள் ஊர் மக்களால் நீக்கப்படுகிறது . எங்கள்
ஊரில் இருந்த மதுக்கடைகளை நீக்கிவிட்டோம்.
எங்கள் கிராமத்துக்கு அருகில் ஒரு
பஞ்சு மில் உள்ளது. அந்த பஞ்சாலைக்கு வேலைக்கு வருபவர்கள் எங்கள் கிராமத்தில்
தங்குகின்றனர் . அந்த பஞ்சாலை வருடத்தில்
பாதி நாள் இயங்கவில்லை இருப்பிலும் எங்கள்
கிராமத்தில் தங்குபவர்களின்
வாழ்வில் தேய்வு ஏற்படுவதில்லை. எனவே எங்கள் கிராமம் “வந்தாரை வாழவைக்கும் ஊர்” என அழைக்கப்படுகிறது.
எங்கள் ஊரில் சிறப்பு எங்க ஊர் பள்ளி “ஸ்ரீபணிச்சாருடையவன்
தர்மகலாசாலை நடுநிலை பள்ளி” என்ற பெயர்
கொண்ட பள்ளிகூடம் உள்ளது. 1930ஆம் ஆண்டு இந்த பள்ளி S.O.R.M.இராமசாமி செட்டியார் அவர்களால் கட்டிய பள்ளி இப்பள்ளி நிறுவப்பட்டது 88 வருடங்கள் ஆகின்றது. 88 வருட
கட்டிடம் சிறிய தேய்மானம் கூட இல்லாமல் சிறப்பாக உள்ளது. ஒன்றாம்
வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது.
இந்த பள்ளியில் சிறப்பு என்றால்
இந்த பள்ளியில் அதிகபடியான மரங்கள்
மற்றும் அனைத்து நேரங்களிலும் சுத்தத்துடன் காணப்படுகிறது நாம் படித்த
பள்ளி இதுவே . இப்பள்ளி அரசு சார்ந்த பள்ளி ஆகும். எனக்கு மிகவும் பிடித்த பள்ளி
,பல ஏழை மாணவர்கள் படித்து வாழ்வில் முன்னேர
இப்பள்ளி உதவுகிறது.
விவரங்கள்
|
மொத்தம்
|
ஆண்
|
பெண்
|
மொத்த வீடுகளின் எண்ணிக்கை
|
639
|
-
|
-
|
மக்கள் தொகை
|
2,188
|
1,021
|
1,167
|
குழந்தைகள் (0-6)
|
221
|
106
|
115
|
Schedule
Caste
|
253
|
111
|
142
|
பழங்குடியினர்
|
0
|
0
|
0
|
கல்வியறிவு
|
76.26 %
|
84.92 %
|
68.73 %
|
மொத்த தொழிலாளர்கள்
|
1,045
|
614
|
431
|
சிறு தொழிலாளர்கள்
|
214
|
71
|
143
|
எங்கள் ஊரில் பல கோவில்கள் உள்ளது
.சிவன், ஐயப்பன், விநாயகர், முருகன், வல்லனட்டுகருப்பன், கிணற்றடி காளியம்மன், அரியநாச்சியம்மன் மேலும் பல சிறிய கோவில்கள் உள்ளது. எங்கள் ஊரில்
புரவியடுப்பு திருவிழா மிகவும் சிறப்பான முறையும் நடத்தப்படும் திருவிழாக்களில்
ஒன்றாகும். புரவி எனப்படும் வல்லனட்டுகருப்பன் வாகனமான குதிரையை புரவிபொட்டலில்
இருந்து எடுத்து வல்லனட்டுகருப்பன் ஆலயத்தில் வைப்பது இத்திருவிழா ஆகும்.புரவியை
கோவிலில் வைத்த பின்னர் சிறிய அளவிலான மஞ்சுவிரட்டு நடைபெறும்.
இதில் பக்கத்து கிராமங்களில் இருக்கும் மாடுகள் கலந்து கொள்ளும்.திருவிழா முதல்நாள் “வள்ளி திருமணம் நாடகம்” நடைபெறும். இரண்டாம் நாள் “அரிச்சந்திரா மாயனகாண்டம்” நாடகம் நடைபெறும். எங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாக்களில் அடுத்தது பூ திருவிழா மற்றும் பால்குடம் ஆகும் . இந்த திருவிழா சிவன்கோவில் மற்றும் காளியம்மன் கோவிலில் நடைபெறும் . பால்குடம் சிவன் கோவிலில் இருந்து காளியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.திருவிழா அன்று பட்டிமன்றம், நாடகம்,ஆடல் பாடல் ,கச்சேரி,கரகாட்டம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று நடைபெறும்.
இதில் பக்கத்து கிராமங்களில் இருக்கும் மாடுகள் கலந்து கொள்ளும்.திருவிழா முதல்நாள் “வள்ளி திருமணம் நாடகம்” நடைபெறும். இரண்டாம் நாள் “அரிச்சந்திரா மாயனகாண்டம்” நாடகம் நடைபெறும். எங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாக்களில் அடுத்தது பூ திருவிழா மற்றும் பால்குடம் ஆகும் . இந்த திருவிழா சிவன்கோவில் மற்றும் காளியம்மன் கோவிலில் நடைபெறும் . பால்குடம் சிவன் கோவிலில் இருந்து காளியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.திருவிழா அன்று பட்டிமன்றம், நாடகம்,ஆடல் பாடல் ,கச்சேரி,கரகாட்டம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று நடைபெறும்.
காரைக்குடியில் இருந்து வரும் காவடிகள் எங்கள்
ஊரில் உள்ள பிள்ளையார் கோவிலில் வைக்கப்பட்டு எங்க ஊரில் உள்ள காவடிகள் மற்றும்
முருகன் பக்தர்கள் இவர்களுடன் இணைந்து பழனியப்பனை நோக்கி பயணம் செய்கின்றனர். எங்கள்
ஊர் ராஜகாளியம்மன் கோவிலில் இருந்து கொல்லங்குடி அம்மன் கோவிலுக்கு நடைபயணம் மேற்கொள்கின்றனர். இது மூன்று நாள் பயணமாக நடைபெறுகிறது.
எங்கள் ஊரில் ஒரு
முதியவர் இல்லம் உள்ளது .இதில் 100 பேர்
உள்ளனர்.எங்கள் ஊரில் உள்ளவர்கள் அவர்களுக்கு பல உதவிகளை செய்வர்.
எங்கள் ஊரில் இரண்டு
வாங்கிகள் உள்ளது சென்ட்ரல் பாங்க ஆப் இந்தியா(central bank of india), மற்றும்
ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) ஆகிய இரண்டு வாங்கி உள்ளது.ஒரு அஞ்சலகம் , நூலகம்,பல
கடைகள் , e-சேவையகம்,டீ
கடை ,சாப்பாடு கடை போன்ற பல உள்ளது
சுத்துவட்டரத்தில் எங்கள் ஊர் அனைத்து வசதிகளும்
கொண்ட ஊர் ஆகும் .இத்தகைய சிறந்த ஊரில் பிறந்ததால்
எங்கள் ஊர் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
super
ReplyDeletefantastic.....
ReplyDeletethanks
Deleteநல்ல முயற்சி, வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி
Deletesuper...
ReplyDeletethanks a lot
ReplyDeleteThis is my village iam very Happy that see the my village traditional massage thank for you
ReplyDeleteSuper
ReplyDeletemy village
ReplyDelete