ஐயப்பன்


ஐயப்பன் சரித்திரம் :


   மஹிஷி   என்பவர் அரக்கர்களின்  அரசனான மகிசாசுரனின் தங்கையாவார். மகிசாசுரனின் வதத்திற்கு பிறகுஅதற்கு காரணமான தேவர்களை வதைக்க மகிசீ முடிவு செய்தாள். பிரம்மாவை நோக்கி கடுந்தவமியற்றினார். அதனால் மகிழ்ந்த பிரம்மா சிவனுக்கும் திருமாலிற்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகிசீக்கு மரணம் ஏற்படும் என்று வரம் தந்தார்.
   
  பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது. பின்னர் யோகம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார். அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகினியும் ஒன்று சேர்ந்து. பிறந்தவரே ஐயப்பன்.             
   பாண்டிய வம்சத்தின் பந்தள நாட்டு அரசனான ராஜசேகரன் என்பவர் பம்பாதீரத்தில் குழந்தையாக இருந்த ஐயப்பனை கண்டெடுத்தார். அவருக்கு குழந்தை இல்லாதமையினால் ஐயப்பனை வளர்க்க உத்தேசித்தார். குழந்தையின் கழுத்தில் மணி இருந்தமையினால் மணிகண்டன் என்று பெயரிட்டார். அந்நேரத்தில் பந்தள அரசிக்கு ராஜராஜன் என்ற மகன் பிறந்தார். அதுவரை மணிகண்டன் மீது பிரியம் காட்டிய அரசிக்கு தன் மகன் மீது பிரியம் உண்டானது.ஆனால் பந்தள இளவரசனா மணிகண்டனுக்கு  பட்டம் சூட்டுவதற்காக ராஜசேகரன் முடிவு செய்தார். 



   இந்த   முடிவினை விரும்பாத அரசி தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக நம்பச்செய்துஅதற்கு புலிப்பால் வேண்டுமென மருத்துவரைவிட்டு ஐயப்பனின்   சொல்ல சொன்னார். அது சூழ்ச்சி என்பதை   உணர்ந்த     ஐயப்பன் தன் அன்னைக்காக  சென்றார். அங்கு வழியில்  அரக்கி  மகிஷி ஐயப்பனைத் தடுததாள்.வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷி.  


      அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது.    தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இந்திரனே புலியாக மாறமற்ற தேவர்கள்   புலியாக புடை சூழ புலிமேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன்  புலிமேல்   வந்த     மணிகண்டனைக் கண்டு பதறிப் போனாள் அரசி. தான்   செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு   வேண்டினாள் .  ஐயப்பனும் அவ்வாறே செய்து   அருளினார்.மேலும் தன் அவதார  காரணம் பூர்த்தி பெற்றதால் தான்  சபரிமலையில் தவமிருக்கப்   போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்குவருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு   மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார்  அருள்தரும் ஐயப்பன்.  இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக்  கோலத்தில் காணலாம். 


  ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது. ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு மூறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதைசெய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்டபோது அந்தஅங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றேஎழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்ஐயனார் என்பது ஐயப்பன் பத்து அவதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.ஐயப்பன் என்பவர் இந்து கடவுள்களில்ஒருவர்.ஐயப்பன்வழிபாடு கேரளா, தமிழ்நாடு, இலங்கைஆகிய இடங்களில் முதன்மை பெறுகிறது. சபரிமலைஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

ஆறு அய்யப்பன் கோயில்கள்

இந்துக் கடவுள் அய்யப்பனுக்கு கேரளத்தில்ஆறு கோவில்கள் உள்ளன.            1.ஆரியங்காவு 
   2.அச்சன்கோவில் 
   3.குளத்துப்புழா    
   4.எருமேலி       
   5.பந்தளம்      
   6.சபரிமலை

ஆரியங்காவு ஐயப்பன் கோவில் :                                                           நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில், கேரrள மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் சௌராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக காட்சித் தருகிறார் அய்யப்பன்
 அச்சன்கோவில் தர்மசாஸ்தா :
    செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்கோவில் இந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாகஅமர்ந்த நிலையில் கையில் அமுதமும்கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சித் தருகிறார் அய்யப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணாபுஷ்கலை தேவியர் மலர் தூவுவதுபோன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள அய்யப்பன் 'கல்யாண சாஸ்தாஎன்று அழைக்கிறார்கள். இதனால்திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்வதை காண முடிகிறது.
குளத்துப்புழா ஐயப்பன் கோவில்:
     செங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது இது. இங்கு அய்யப்பன் குழந்தையாக இருப்பதால் 'பால சாஸ்தாஎன்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில்இக்கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது.
எருமேலி:
   இங்கு அய்யப்பன்வேட்டை நிமித்தமாக கைகளில் வில்அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில்காட்சித்தருகிறார். 
எருமேலி கேரளமாநிலத்தில்உள்ளது.
பந்தளம்:
இங்கு தான் பந்தள மன்னன் ராஜசேகரப் பாண்டியனால் அய்யப்பன் சீரோடும்சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோவில் இங்கு உள்ளது. இங்கு தான் சுவாமி அய்யப்பனுக்கு உரிய திரு ஆபரணங்கள் உள்ளன.
சபரிமலை அய்யப்பன் கோயில்:
    கேரளாவில் உள்ள இங்கு தர்மசாஸ்தாவான அய்யப்பன் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கிஎல்லோருக்கும் கேட்டதை வாரி வழங்கும் வள்ளலாக காட்சித் தருகிறார்.சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள்அய்யப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


2 comments:

யாளிகள்

உலகின் மிகப்பெரிய விலங்கு:    நாம் அனைவரும் டைனோசர் என்ற விலங்கை ஆங்கில படங்களில் கண்டு அதுவே உலகில் பெரிய விலங்கு என் நினைத்து கொண...