வேட்டங்குடி


வேட்டங்குடி 


      எனது ஊரின் பெயர் கொள்ளுக்குடிப்பட்டி .எனது ஊரின்  மற்றொரு பெயர் வேட்டங்குடி.

    வேட்டங்குடி பறவைகள் சரணாலயம், சுமார் 0.384 சதுர கிலோமீடர் பரப்பளவில் அமைந்த ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்த இந்த இடம் 1977 ஆம் ஆண்டு சூன் மாதம் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

      இங்குள்ள கொள்ளுகுடிப்பட்டி கண்மாய்க்கு, உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை போன்ற 217 வகையான சுமார் 8000 வெளிநாட்டுப் பறவைகள் மழைக்காலத்தில் இங்கு வருகின்றன.

 இது சுற்றுலா  தளத்தில் ஓன்று .எனது ஊரில் 100 வருடத்திற்கும் மேலாக ஒரு ஆலமரம் ஓன்று உள்ளது. மரத்தின் அடியில்  தூங்கும் இடம் உள்ளது ,வரும் சுற்றுலா பயணிகள் இங்கு தங்கி ஓய்வு எடுத்து விட்டு செல்வார்கள். இங்கு சுற்றுலா பயணிகள் தாங்கும் விடுதியும் உள்ளது. இங்கு வரும் பயணிகள் பறவைகளை பார்ப்பதற்கென்று மூன்று கோபுரங்கள் உள்ளன அதன் மேல் சென்று பறவைகளை பார்த்து ரசிக்கலாம். அதன் மேல் நின்று பார்த்தால் பறவைகள் அனைத்தையும் பார்த்து ரசிக்கலாம். வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் வருகின்றன. இவைகள் பார்க்கவரும் சுற்றுலா பயணிகள் பறவைகளை பார்த்து மகிழ்ந்துவிட்டு ,பின் ஓய்வு எடுத்துவிட்டு செல்வார்கள் .ஆலமர நிழலின் கீழேயே குழந்தைகள் விளையாடும் சிறுவர் பூங்கா ஓன்று உள்ளது . 

சிறியவர்கள் விளையாடுவதர்கென்றேற் தனி தனி விளையாட்டு மைதானங்கள் உள்ளன .இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பறவைகளை அருகில் சென்று பார்க்கலாம் . அவற்றிக்கு சில சட்டத்திட்டங்கள் உள்ளன .பறவைகளை அதன் அருகில் சென்று துன்புறுத்தினால் வனத்துறையினர் தண்டனைகள் மிக மோசமாக இருக்கும் .எனது ஊரில் உள்ளவர்கள் அனைவரும் வனத்துறையோடு சேர்ந்து பறவைகளை பாதுகாத்து வருகின்றார்கள் .இங்கு தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு வெடிபோன்ற அதிக சத்தம் தருபவற்றை உபயோக படுத்தமாட்டார்கள் .அவ்வாறு உபயோக படுத்தினால் வனத்துறை காவலர்களால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .இது ஊரில் இருப்பவர்களுக்கு மட்டும் அல்ல வெளிஊரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் தான் .



எனது ஊரில் 100 வருடங்களுக்கும் மேலாக இரண்டு ஆலமரங்கள் உள்ளன .அவைகள் எங்களுடைய முன்னோர்கள் வேலை பார்த்துவிட்டு வரும் விவசாயிகள் அங்கு தூங்கி இளைப்பாறிவிட்டு செல்வதற்க்காக வைக்கப்பட்டவை ஆகும் .இந்த ஆலமரத்தின் இரண்டு பக்கம் தண்ணீரால் சூழப்பட்டு இருக்கும் இதனால் எந்த நேரமும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டேயா இருக்கும். மீதமுள்ள இரண்டு பக்கமும் தூங்குவதற்காக கிரானைட் கற்கள் கொண்டு இரண்டு வட்ட மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன .இந்த மைதானங்களில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டு  விட்டு செல்வார்கள் . இங்கு சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது .இங்கு அனைத்து வசதிகளுடன்கூடிய தங்கும் விடுதி ஓன்று உள்ளது .வரும் சுற்றுலா பயணிகள் வந்து தங்கி செல்கின்றன .



இங்கு ஒரு கோவில் ஓன்று உள்ளது .அது எங்களுடைய முன்னோர்களால் அமைக்கப்பட்டது .அந்த கோவிலின் பெயர் [ஸ்ரீ காரி மகா சாத்தையானார் ] ஆகும் .இதன் நோக்கம் கொள்ளுக்குடிப்பட்டியை சுற்றியுள்ள மூன்று கிராமங்களை ஓன்று சேர்க்கும் நோக்கத்தோடு கட்டப்பட்டதாகும். [வேட்டங்குடிபட்டி,அய்யப்பட்டி,கிருஷ்ணாபுரம் ] ஊர் மக்கள் அனைவரும்  இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றன. இங்கு வருடம் மூன்று முறை திருவிழா நடைபெறும் .திருவிழாக்களில் இந்த மூன்று ஊர் மக்கள் ஓன்று சேர்ந்து நடத்துவர் .
சிறப்பமசங்கள் :
எங்கள் ஊரை சுற்றி  நான்கு திசைகளிலும் நான்கு கோவில்கள் உள்ளன .நான்கு திசைகளிலும் நான்கு பெரிய குளங்கள் உள்ளன.






No comments:

Post a Comment

யாளிகள்

உலகின் மிகப்பெரிய விலங்கு:    நாம் அனைவரும் டைனோசர் என்ற விலங்கை ஆங்கில படங்களில் கண்டு அதுவே உலகில் பெரிய விலங்கு என் நினைத்து கொண...