Friday, August 17, 2018

யாளிகள்


உலகின் மிகப்பெரிய விலங்கு:

   நாம் அனைவரும் டைனோசர் என்ற விலங்கை ஆங்கில படங்களில் கண்டு அதுவே உலகில் பெரிய விலங்கு என் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அதை விட மிக பெரிய  விலங்கு நமது குமரி கண்டத்தில் இருந்தது என்றால் உங்களால் நம்ப முடியுமா! ஆம் நமது பகுதியில் இருந்த உலகிலே   மிக பெரிய விலங்குதான் யாளி .இதை பண்டைய தமிழர்கள் தன் திறமைகளால் அதன் மனதை கட்டுபடுத்தி அதை போர்களில் பயன்படுத்தினர் .அத்தகைய விலங்கை பற்றி காண்போம்.
    யாளி என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், என்றும் அழைக்கிறார். இவற்றைப் பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில்காணலாம். தென்னிந்தியச் சிற்பங்களில்  பரவலாக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம்போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்.
பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்
·         சிம்ம யாளி
·         மகர யாளி
·         யானை யாளி
    சிங்கத்தின் தலை கொண்டதை "சிம்ம யாழி" என்றும்,

    ஆட்டுத்தலை கொண்டதை "மகர யாழி" என்றும்,
   யானை முகத்தை "யானை யாழி" என்றும் அழைக்கிறார்கள்.

   நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மிக பெரிய  உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள். பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது. அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள்.

இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாழிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை "யாழி வரிசை" என்றே அழைக்கிறோம். 
        ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில் கூட இந்த யாழிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது. உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது. மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாழியின் சிலையும், அந்த யாழி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட யாழி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன. உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை. குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாழி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம். அது தான் யாழி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் நிலை ஆகும் 
      யாழிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன. யாழியில் எத்தனை வகைகள் உள்ளன. பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா? யாழி உருவம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது? நமது சிறிய கோவில்களிலும் யாழியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா? யாழியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன? யாழி என்ற உயிரினம் கற்பனையா? இல்லை அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா? யாழி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகமா? வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன? குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப்போகிறார்? பதவிக்கு அடித்துக்கொள்ளும் தமிழக அரசியலில் இவற்றின் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா அல்லது கடைசி வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இவை மண்ணோடு மண்ணாகிவிடுமா?
என்னைப்பொருத்தவரை.... 
யாழிகள் ஒருவேளை கற்பனை விலங்காகவே இருந்தாலும் கூட...
சீனர்களின் புராதன விலங்கு டிராகன் போல...
எகிப்தியரின் புராதன பறவை ஃபீனிக்ஸ் போல...
தமிழரின் புராதன விலங்கு யா‌ழி
அவை போற்றப்பட வேண்டும்.



Tuesday, August 7, 2018

தலைவர் கருணாநிதி



கலைஞர் மு.கருணாநிதி


              ருணாநிதி நல்ல மனிதர்  என்று என்னுடன் இருக்கும் சில மாணவர்களிடம் கூறினால் ,அவர்கள் கூறுவது கலைஞர் அதிகமாக சொத்துக்களை வைத்துள்ளார் அது அனைத்தும் முதல்வராக இருக்கும்  பொழுது சம்பாதித்தது  மற்றும் அவர் முன்று மனைவிகளை திருமணம் செய்து உள்ளார் அவரை நல்லவர் என்று சொல்லுறிய என் இருவர்    கூ டிக்கொண்டு   நம்மை எதிர்ப்பர்

             கருணாநிதி  வாழ்வில் சிறிது காலம் முன் சென்று பார்த்தல் கருணாநிதி சிறுபிள்ளையாக  இருந்த காலத்தில்  ஒருசில குறிப்பிட்ட இனமக்கள் கோவிலுக்குள்  செல்லகூடாது , ஒரு சில குறிப்பிட்ட இனமக்கள் பார்த்தால்(அவர்கள் மேல் இனம் என் கருதி ) அவர்கள் முன்    காலணிகள் அணிய கூடாது ,டீ கடைகளுக்கு சென்றால் அவர்களுக்கென தனியாக ஒதுக்கப்பட்ட  குவளை  , மேல்  சட்டைகளை அணிய கூடாது  , சாதாரண  கைக்குட்டைகளை கூட தோழில்  அணிய இயலாத   நிலையில் குறிப்பிட்ட  இன மக்கள் வாழ தகுதியற்ற நிலையில்  தமிழகம் இருந்தது . காலப்போக்கில் இவையெல்லாம் ஒருசில சமுக சீர்திருத்தவாதிகளை மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்யப்பட்டது  .அம்பேத்கர் , பெரியார்,  அண்ணா மேலும் பல பெரும்தகைகள் இதில் பங்கு வகித்தனர் . ஆனால்  கோவிலுக்கு சென்றலும் , சட்டை அணிதல் இத்த பிரச்சனை சரியாகிவிடாது . அவர்களிடம்  பணம் பெற்று வாழ அதிகபடியான விவசாயநிலம் விவசாயம் செய்ய பணமோ இருப்பதில்லை . மீண்டும் மேல் இனத்தவர்களிடம் பணபலம் படைத்தவர்களிடம்   அடிமையாக வேலைசெய்ய வேண்டியநிலை  அவர்களுக்கு ஏற்ப்பட்டது. அப்பொழுதுதான் கருணாநிதி அரசியலில்  முதல்வர் ஆகி மக்களுக்கு தொண்டு செய்ய தொடங்கினார்.ஏழைகளுக்கும்  கருணாநிதி ஒரு சட்டத்தை இயற்றினார். அதுதான் இடஓதுக்கீடு திட்டம், இடஓதுக்கீடு என்பது ஒருசில குறிப்பித்த இன மக்கள் ஒவ்வொரு  அரசு வேலைகளிலும்  அவர்கள் இன மக்கள் குறைந்தபட்சம்   தேர்ச்சி பெற்றிருந்தாலே அவர்களுக்கு வேலை கிடைக்கும்வேண்டும்  என்ற அடிப்பபையில் அமைக்கப்பட்டது . அதற்கு பின்னர் தமிழகம் முழுவதும் மக்கள்  அவனைவரும் சமம் என்ற வகையில் மாறிய தமிழகத்துக்கு சொந்தக்காரர் கலைஞர் ஆவார்    .  என்னை பொறுத்தவரை கருணாநிதி அவர்கள் தவறே செய்து இருந்தாலும்  இடஒதிக்கிடு என்ற பெயரில் அவர் பலர் குடும்பத்தில் ஒளியை ஏற்றினார்.
       இதுமட்டுமின்றி  தமிழ்நாட்டில்  கல்வி என்பது கொஞ்சம் காலம் வரை பணம்பலம் பதைத்தவர்கள் மட்டும் படித்துவந்தனர். அதை மாற்ற கலைஞரின் வழி    ஊக்கத்தொகை . பள்ளி மற்றும் கல்லூரிகளில்  ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது இந்த ஊக்கத்தொகை வைத்து கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் பல ..
       அனைவரின் ஏழை வீட்டில் தனது தாய் காலை முதல் மாலைவரை நமக்கு சமைக்க விறகு அடுப்புகளில் படும் வேதனைகளுக்கு நாம் கண்முன் கண்டோம். அதற்கு எரிவாயு  அடுப்பு திட்டம் முலம் தீர்வு அளித்தவர் தலைவர் கலைஞர் கருணாநிதி ஆவர்  .




                               கருணாநிதி சிறப்புகளின் முக்கியமானது  “தமிழ் மொழி செம்மொழி“ என்பதை உலகத்துக்கு    கூறியது  .  செம்மொழி மாநாடு கோவையில்  2010 ஆம் ஆண்டு நடைபெற்றது. அது        கருணாநிதி தமிழ் மொழி மீது அதிக பற்று கொண்டவர் ,அவர் அரசியலை போன்று தமிழுக்கும் பல தொண்டற்றினார் ,அவர் கால போக்கில் பல திரைப்படங்களுக்கும் கதை எழுதியும் உள்ளார் ,கலைஞர் உலகின் மிகசிறந்த எழுத்தாளர் ஆவர் . கருணாநிதி தமிழில் புலமை பெற்றவர் ஆவர்.திருவள்ளுவருக்கு குமரியில் 133அடியில் மிகப்பெரிய அளவில் ஆன சிலையை வைத்தார். அந்த செயல் அவறுடைய  தமிழ் அருவத்தை குறிக்கிறது .   03.06.1924ஆம் ஆண்டு பிறந்த கருணாநிதி  தனது 94ஆம் வயதில் உடல்நல குறைவு  காரணமாக    07.08.2018 ஆம் ஆண்டு டாக்டர் கலைஞர் மறைந்தார் .. அத்தகைய மாமனிதர் ஏழைகளின் கடவுள், சிந்தனை சிற்பியின்  மரணம்  இந்தியாவை கண்கலங்க வைத்தது...



Monday, August 6, 2018

பழனி முருகன்


பழனி முருகன்




            பழனி முருகனுக்கு தமிழகத்தில் இருக்கும் பக்தர்களை  விட வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிகமாக வருகிறார்கள் அதற்கு காரணம் என்ன என்பது  தமிழனகிய நமக்கு தெரிவதில்லை.   தமிழர்கள்  ஆகிய நாம் நமது மரபை அறிய 7லாம் அறிவு போன்ற ஒரு  திரைப்படத்தை  எதிர்பார்க்கிறோம். நமது மரபையும் முன்னோர்களையும்  பற்றி நாம் தான் அறிய வேண்டும் என மாமனிதர் ஒருவர் கூற  அதன் பயன்  இதோ:


       பழனிமலை முருகன் சிலை சாதாரண கல் மூலம் செய்யப்பட்ட சிலை அல்ல.  அது ”நவபஷனசிலை” என அனைவராலும் அழைக்கப்படுகிறது. ஆனால் மக்கள் அனைவரும் நவபஷனம் என்பது ஒரு  அறிய வகை பொக்கிஷம் எனவும் , சிலையில்  பலவகையான மர்மங்கள் உள்ளது எனவும்   நினைக்கின்றனர்.




        அத்தகைய மர்மத்துக்கு காரணமானவர் தான் போகர்  என்னும் சித்தர் ஆவர். போகன் ஆயகலைகள் ஆறுபத்திநான்கையும்  கற்றவர். அவர் சித்தமருத்துவ துறையிலும் சிறப்பு பெற்றவர். போகன் தனது திறமைகளை ஓலைச்சுவடிகளில் எழுதினால் அதை பாதுகாப்பது கடினம் என்பதை   அறிந்த போகன்  எதிர்காலத்தில் வரும் நோய்களை தீர்க்கும் வகையில்  ஒரு சிலையை  செய்ய முடிவுச் செய்தார்.  அதில் இருக்கும் சிறப்பு அச்சிலை ஒன்பது கொடிய விஷத்தன்மை வாய்த்த  தாவரத்தில் இருந்து செய்யப்பட்டது.  அச்சிலை ஒன்பது வருடம் 81 சித்தர்களால்  செய்யப்பட்டது. 

                         பண்டைய தமிழர்கள்,  ஒருவர் பிறக்கும் நேரத்தில் 9  கோள்களின் நிலையை வைத்து அவரின்  பிறப்பு இறப்பு அவருக்கு  வரவிருக்கும் நோய் போன்ற  பலவற்றை கணித்தனர் . அதை போலவே போகன் ஒரு கோளுக்கு ஒரு தாவரம் 9 சித்தர்கள்  விகிதம் 9 கோளுக்கு 9 விஷத்தன்மை(பாசனம்) வாய்த்த தாவரத்தை வடித்து சிலையாக்கி உள்ளார். போகன் தனது 81 சித்தர்களுக்கு தலைமையாக புலிப்பாணி என்னும் சித்தரை வைத்துள்ளார் .போகர் வாழ்த்த காலம் 2500 ஆண்டுகள்   முற்ப்பட்டது ஆக கூறப்படுகிறது . ஆகவே பழனி முருகன் சிலை 2500 ஆண்டுகள் முற்ப்பட்டதாக இருக்கவேண்டும் . ஒரு விஷத்தால் செய்யப்பத சிலை இன்றுவரை சிறப்பாக உள்ளது . தினமும்  அபிஷகங்கள் போன்ற பல அச்சிலைக்கு செய்யப்படுகிறது. இன்றுவரை அச்சிலை எந்த வித தேய்மனமும் இல்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது . போகன் சிறியாளவில் ஆன கோவிலை மலை  மேல் கட்டினர். பின்னர் வரும் காலத்தில் சேரமன்னர்  சிலையின் வரலாறு அறிந்து ஒரு கோவிலை கட்டினர் அதுவே நம் தற்போது வழிபாடும் கோவில் ஆகும். பழனி மலையின் ஒரு குகை உள்ளது. போகன் கடைசியான அதற்குள் தான் சென்றான் எனவும் இன்னும் அவர் அதற்குள் தான் வாழ்த்துகொண்டு  தியானம் செய்துகொண்டு இருக்கிறார் என்று பழனிமலை பகுதி மக்களால் நம்பப்படுகிறது . 



            போகரின் தலைமை சித்தர் புலிப்பாணியும் அவரின் வம்சமும் பழனி சிலையை பார்த்து பாராமரித்து வந்தனர்  கி.பி 600யில்  கோவில்களில் சமஸ்கிருதம் நுழைத்த பொழுது மாற்றப்பட்டது.
 இன்று  பழனி முருகன் சிலையில் வைக்கப்பட்ட சந்தனத்தை உண்டால் தீர்க்க முடியதா நோய்கள் தீர்கிறது . 2500 ஆண்டுகளுக்கு முன் சிந்தித்து தற்போது வரவிருக்கும் நோய்களை தீர்க்கும் மருந்தை  எவரும் அசைக்க முடியாத வகையில் மக்கள் நம்பிக்கையில்   வைத்தவர்கள்  தன் தமிழன் . இதை அறிந்த வெளிநாட்டவர்   பழனியை நோக்கி படையெடுக்கின்றனர் .




யாளிகள்

உலகின் மிகப்பெரிய விலங்கு:    நாம் அனைவரும் டைனோசர் என்ற விலங்கை ஆங்கில படங்களில் கண்டு அதுவே உலகில் பெரிய விலங்கு என் நினைத்து கொண...