உலகின் மிகப்பெரிய விலங்கு:
நாம் அனைவரும் டைனோசர் என்ற விலங்கை ஆங்கில
படங்களில் கண்டு அதுவே உலகில் பெரிய விலங்கு என் நினைத்து கொண்டு இருக்கிறோம்.
ஆனால் அதை விட மிக பெரிய விலங்கு நமது
குமரி கண்டத்தில் இருந்தது என்றால் உங்களால் நம்ப முடியுமா! ஆம் நமது பகுதியில்
இருந்த உலகிலே மிக பெரிய விலங்குதான்
யாளி .இதை பண்டைய தமிழர்கள் தன் திறமைகளால் அதன் மனதை கட்டுபடுத்தி அதை போர்களில்
பயன்படுத்தினர் .அத்தகைய விலங்கை பற்றி காண்போம்.
யாளி என்பது தமிழ் கோயில்களில் காணப்படும்
ஒரு தொன்ம உயிரினச்
சிற்பமாகும். இதை வியாழம், என்றும்
அழைக்கிறார். இவற்றைப்
பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில்காணலாம். தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாக்
காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம்போன்ற
ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட
மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று
உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்.
பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்
·
சிம்ம யாளி
·
மகர யாளி
·
யானை யாளி
சிங்கத்தின் தலை கொண்டதை "சிம்ம யாழி" என்றும்,
ஆட்டுத்தலை கொண்டதை "மகர
யாழி" என்றும்,
யானை முகத்தை "யானை யாழி"
என்றும் அழைக்கிறார்கள்.
நாம் வாழ்ந்து
கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மிக பெரிய உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற
மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள்
தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை
ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள். பின்னர், இது குறித்த திரைப்படங்களை
இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை
சென்றடைந்தது. அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய
துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக
பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை
போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள்.
இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே
சென்று பார்த்தோமேயானால், இந்த யாழிகளுக்கென்று தமிழர்கள்
தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை "யாழி
வரிசை" என்றே அழைக்கிறோம்.
ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில்
கூட இந்த யாழிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது. உருட்டும்
கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின்
முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது. மேலும் தஞ்சை
பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற
தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு
கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாழியின் சிலையும், அந்த யாழி சிலையின் முழங்காலுக்கு
கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட யாழி சிலை தென்
இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன.
உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது
உலகம் அறிய தவறிய உண்மை. குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர்
கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாழி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம்.
அது தான் யாழி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் நிலை ஆகும்
யாழிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன. யாழியில் எத்தனை வகைகள் உள்ளன. பண்டைய காலத்தில் வாழ்ந்த
சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா? யாழி உருவம் எங்கெல்லாம்
பயன்படுத்தப்படுகிறது? நமது சிறிய கோவில்களிலும் யாழியின்
உருவம் உள்ளதை நாம் அறிவோமா? யாழியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன? யாழி என்ற உயிரினம் கற்பனையா? இல்லை அறிவியல் பூர்வமாக அது ஒரு
உயிரினமா? யாழி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான
மிருகமா? வாழாத ஒரு உயிரினத்தை
ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன? குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து
யார் ஆராய்ச்சி செய்யப்போகிறார்? பதவிக்கு அடித்துக்கொள்ளும் தமிழக அரசியலில் இவற்றின்
ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா அல்லது கடைசி வரை அவிழ்க்க முடியாத மர்ம
முடிச்சாகவே இவை மண்ணோடு மண்ணாகிவிடுமா?
என்னைப்பொருத்தவரை....
யாழிகள் ஒருவேளை கற்பனை விலங்காகவே
இருந்தாலும் கூட...
சீனர்களின் புராதன விலங்கு டிராகன்
போல...
எகிப்தியரின் புராதன பறவை ஃபீனிக்ஸ்
போல...
தமிழரின் புராதன விலங்கு யாழி